Mental Health Awareness

           வாழ்வு விந்தையானது மட்டுமல்ல; சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனதுக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும்; தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.

ஒருவர் தன்னைக் குறித்து முழுமையாக புரிந்து வைத்திருப்பது,தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் ஒரு சுமூகமான உறவில் இருப்பது, ஒருவர் செய்யும் காரியங்கள் தனக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் விதத்தில் இருப்பது என மூன்று விஷயங்களில் சரியாக இருப்பவர்கள் நல்ல மனநலத்துடன் இருக்கிறார்கள் எனலாம்.

ஏமாற்றங்களும் பிரிவுகளும் இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்தத் தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.


அறிகுறிகள்

           பொதுவாக ஒரு நபரின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், அவர் நல்ல மன நலத்தோடு இருக்கிறாரா இல்லையா என்பதை வெளிப்படுத்தும். நன்றாக பேசக் கூடியவர் திடீரென பேசுவது குறைகிறது என்றாலோ, நல்ல தூக்கம் இல்லாமல் தவிப்பது, அதிகம் கோபப்படுவது, அதிகம் பயப்படுவது, பெரிதாக ஆடை அணிகலன்களில் கவனம் கொடுக்காத ஒருவர் திடீரென அதீதமாக அதில் கவனம் செலுத்தினாலோ, அதிகம் ஆன்மிகம் அல்லது தத்துவார்த்தமாகப் பேசத் தொடங்குவது, எதிர்மறையாகவே பேசுவது, எப்போதும் சோகம் தொய்ந்த ரீதியிலேயே பேசுவது, சுய அழகு பராமரிப்புகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது போன்றவைகள் அவருக்கு ஏதோ மன நலத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாகக் கருதலாம்.

மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள்; சுற்றத்தை விட்டு விலகுவார்கள்; நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள்; வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். வழக்கத்துக்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவிதக் குழப்ப மனநிலையில் இருப்பார்கள். கோபமும் வருத்தமும் பயமும் மிகுந்து ஒருவித விளிம்பு நிலையில் / உணர்ச்சிகள் வெடித்துவிடும் நிலையில் அவர்கள் இருப்பார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்கும். நீண்டகால நோய்கள், பதற்றம், எண்ணச் சுழல் நிர்ப்பந்த நோய் (Convulsive disease) மனச்சிதைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளோடு மனஅழுத்தத்துக்குத் தொடர்புண்டு. இது வழக்கமாக இரண்டாண்டுகளோ அதற்கு மேற்பட்ட ஆண்டுகளோ நீடிக்கலாம்.


மன அழுத்தக் காரணிகள்

           மூளையில் இருக்கும் லிம்பிக் அமைப்பு நமது உடலின் செயல்பாடுகளையும் மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளுக்குப் பின் நமது மனநிலையை இந்த அமைப்பே சமன்படுத்துகிறது. நரம்புகளாலான லிம்பிக் அமைப்பில் செரடோனின், நொராடிரினலின் என்ற இரண்டு ரசாயனங்கள் தகவல்களைப் பரிமாறும் வேலையைச் செய்கின்றன. மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு இந்த ரசாயனங்களின் சுரப்பு குறைவாக இருக்கும். இதன்படி பார்த்தால், மன அழுத்தம் என்பது மனநோய் அல்ல; அது உடலின் நோய்.

நிதி நெருக்கடி, தனிப்பட்ட இழப்புகள், உறவுகளின் பிரிவுகள், நீண்ட நாள் நோய், தாங்க முடியாத வலி, போதைப் பொருட்களின் பயன்பாடு, கடந்த கால அதிர்ச்சிகள், அவமானங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதை மருத்துவ உலகம் இன்று ஏற்றுக்கொண்டு உள்ளது. மேலும், அதீத மன அழுத்தமோ சிலவகை நோயோ நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைத் தேவைக்கு அதிகமாக இயங்கவைக்கும். இதன் காரணமாக மூளையில் வீக்கமும் அதன் காரணமாக மன அழுத்தமும் ஏற்படும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது.


சிகிச்சைகள்

           உடலின் ரசாயனக் குறைப்பாட்டால் நேரும் மன அழுத்தத்தைத் தீவிர மன அழுத்தம் என்றும், வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை மிதமான மன அழுத்தம் என்றும் மனநல மருத்துவர் ருத்ரன் கூறுகிறார்.

தீவிர மன அழுத்தத்துக்கு, இருவகை அழுத்தம் குறைக்கும் (Anti depressant) மருந்துகள் உள்ளன. ஒருவகை மருந்து, நோயுற்றவரின் பரபரப்பைக் கட்டுப்படுத்தி அவரை அமைதிப்படுத்தும். இரண்டாவது வகை மருந்து, சோர்வையும் அசதியையும் நீக்கி சுறுசுறுப்பை அதிகரிக்கும். தற்கொலை எண்ணங்களோ முயற்சிகளோ அதிகமாக இருக்குமேயானால், அப்போது நோயுற்றவர்களை மருத்துவமனையில் சேர்த்துக் கண்காணிக்க வேண்டும். எவ்வளவு காலம் மருந்து உட்கொள்வது என்பதை மருத்துவரே தீர்மானிக்க முடியும்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் கட்டுக்குள் வந்தபிறகே மன ஆலோசனை நோயாளிகளுக்கு கைகொடுக்கும் என்கிறார் அவர்.

மிதமான மன அழுத்தத்துக்கு மன ஆலோசனை மிகவும் முக்கியம். அதனால் ஏற்படும் உறக்கமின்மை, பதற்றம் ஆகிய இரண்டையும் குறைப்பதற்காக ஆரம்ப கட்டங்களில் மாத்திரைகள் தேவைப்படும். தூக்கம் இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டால், மாத்திரைகளை நிறுத்திவிடலாம். ஆழ்நிலை உறக்க வைத்தியத்தில் செய்யும் கருத்தேற்றம், மிதமான மன அழுத்தத்துக்கு நல்ல பலன்களைத் தரும்.


தடுப்பது எப்படி?

           மிக எளிமையான விஷயம் தான், அவர்களிடம் மாற்றம் ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே சுற்றி உள்ள நண்பர்கள், கணவன், மனைவி, குடும்பத்தினர், சக ஊழியர்கள் பேச வேண்டும். யாராவது மனது சரியில்லை என்று கூறினால் உதாசீனப்படுத்தாமல், அறிவுரை கூறி புறந்தள்ளாமல், அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை கொடுக்கும். அது அவரின் மன நிலையை மாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதையும் மீறி அவர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் இருப்பதாக தெரிந்தால் மனநல மருத்துவரிடம் அழைத்து ஆலோசனை பெற வேண்டும்.

மனநலம் பாதிக்கப்படும் போது, பொதுவாக தன்னலன் மீது அக்கறையற்ற இருப்பர். ஆகையால் அவர்களின் நலனுக்காக அவர்களுக்காக நாம் முடிவெடுத்து அதற்கான தீர்வை பெற்றுத்தருவது அவசியம்.

மனநலம் காப்போம், மகிழ்வோடு வாழ்வோம்

மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிஷப் சார்ஜெண்ட் அன்பின் இல்லம்

  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி தங்கும் வசதிகள்
  • சிறந்த மருத்துவ சிகிச்சை
  • சிறந்த மன நல வளமாக்கும் ஆலோசனைகள்
  • ஆரோக்கியமான உணவு

பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் மற்றும் விழா காலங்களில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்து உதவலாம்.

Food Type/ Timing Breakfast Lunch Dinner

Vegetarian

(for 100 person)


₹ 5,000
(Idly-Chuttney | Pongal-Sambar | Puri-Kuruma)

₹ 8,000
(Satham | Sambar | Rasam | Keerai | Koottu | Pulikulambu)

₹ 5,000
(Dosai | Idly | Chappathi | Sambar | chuttney)

Non-Vegetarian

(for 100 person)


₹ 6,000
(Lemon/Tomato Sadham + Egg)

₹ 12,000
(Sadham | Mutton/Chicken/Fish Kulambu | Rasam)

₹ 6,000
(Dosai | Idly | Chappathi | Chicken Kuruma/Kulambu)

Tea & Snacks

(for 100 person)

Evening
₹ 1,000
(Biscuit / Sundal / Payir + Tea)

Contact Details

      Bishop Sargent Anbin Illam,
      Opp. to Cathedral(Tower) Church,
      No.20, Guru Street,Murugankurichi,
      Palayamkottai,Tirunelveli - 627 002.
      Tamilnadu,South India


      875 491 3437, 0462 4562373, 0462 2500773

    Account Details

    Name - Director TDTA Bishop Sargent Anbin illam
    Account Number - 0067 0100 0039 275
    Bank Name - Indian Overseas Bank
    Branch - Palayamkottai
    IFSC - IOBA 000 0067
    SWIFT - IOBA INBB 100